Translate

செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இரண்டாம் நாள் உபயம் (26/07/2017) புதன்கிழமை இந்திர விமானம் அம்மன் வீதி உலா


ஆறாம் நாள் உபயம் (29/07/2017) ஞாயிற்றுக்கிழமை இந்திர விமானம் அம்மன் வீதி உலா





ஏழாம் நாள் உபயம் (30/07/2017) திங்கட்கிழமை




சனி, 23 டிசம்பர், 2017

எட்டாம் நாள் (01/08/2017) செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா




ஐந்தாம் நாள் (29/07/2017) சனிக்கிழமை வேப்பமரத்தில் சிங்கம் வீதி உலா




நான்காம் நாள் உபயம் 28/07/2017 வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா







இரண்டாம் நாள் (26/07/2017) புதன்கிழமை இந்திர விமானம்.

மூன்றாம் நாள் உபயம் முத்துப்பல்லாக்கு வீதியுலா





வெள்ளி, 21 ஜூலை, 2017

டாஸ்மார்க்

புதியதாக திறக்கப்பட்ட கடை

காவல் காக்கும் காவலர்

பாதுகாப்பாக நிற்கும் வேன்

     நேற்று (20-07-2017) நமது வீரப்பாண்டியில் 2 வேண் காவலர்கள் பாதுகாப்பில்  டாஸ்மார்க் மது பானக்கடை திறக்கப்பட்டது கடை திறப்பதற்கு முன்பு வேன் ஊரைச் சுற்றி வந்து நம்மை மிரட்டும் தோணியில் காவல் துறையின் செயல்பாடு அமைந்தது

      நமது கிராமசபையில் நமது ஊருக்கு டாஸ்மார்க் வேண்டாம் என்று கிராமசபையில் வைத்து தீர்மானம் போடப்பட்டது இதையும் மீறி அரசு டாஸ்மார்க் மது பானக்கடையை காவல் துறையின் பாதுகாப்பில் திறந்து இரவு கடை மூடிய பின்பு பாதுகாவல் இருக்கின்றது
கடையைப் பத்திரமாக முட்டியபின்பு ஊரைச் சுற்றி வருகின்றது காவல் துறையின்  வேன்


     என்ன மாயம் சட்டமன்றம் முடிந்த உடனே கடை திறக்கப்பட்டது


     நமது வீரப்பாண்டியை சுற்றியுள்ள ஒட்டம்பட்டு, ,அருணாபுரம், கல்லந்தல், ஆதிச்சனுர். போன்ற ஊரில் டாஸ்மார்க் வைக்க இடம் வழங்கவில்லை.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

தைப்பூச திருவிழா 2017

     வெள்ளிக்கிழமை காப்புக் கட்டி நேற்று(09/02/2017) காலை மணிக்கு புலிக்கள் பெரியாயி கோவிலில் இருந்து சக்தி வேல் எடுத்துவந்து.

      மதியம் குளக்கரையில் உள்ள முருகர் கோவிலில் வேல் குத்தி, காவடி எடுத்துத் தீ மிதித்து  ஊரைச் சுற்றிவந்து.

     இரவு சவுண்டேச்வரி கோவிலில் இருந்து மயில் வாகனத்தில் முருகர் வீதி உலா வந்தார்.

தீ மிதித்ல்

காவடியாட்டம்


காவடியாட்டம்


மாட்டு வண்டியில் மயில் வாகணத்தில்  முருகர் வீதியுலா


மயில் வாகணத்தில் முருகர்

முருகர்

வியாழன், 26 ஜனவரி, 2017

600 க்கும் அதிகமான மூலிகைசெடி வகைகள் - செ.சி.ப மூலிகை பண்ணை


     சின்னதாக இருமல் தும்மல் வந்தாலே ஆங்கில மருந்துகடைகளை நாடிச்செல்வோர் மத்தில் தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம்.  இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர் திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க  கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும்  கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார் இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும்  மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார். மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார். கோவை வேளாண் பல்கலைகழகத்தில் மூலிகை வளர்ப்பு குறித்த சான்றிதல் படிப்பும் முடித்துள்ளார்.


திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின் பெயர்கள்:

       சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை,  நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்),  அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில்,  அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி   தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை   நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்),  ஆலமரம்,  மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்


திரு.பவானந்தம் அவர்கள் கூறிய சில முலிகை குறிப்புகள்:


ஆடாதோடை - காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும்


சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும்

சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) - சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.

நாகமல்லி பாம்பு விஷம் போக்கும்

7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு,  மா, பலா, கிலா

மருத்துவ மரங்கள்: வேம்பு, கும்பகொடளி, ஆலமரம்,  மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்

செ.சி.ப மூலிகை பண்ணை

ஆராய்சி மையம்,

79,காமராசர் சாலை, கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் - 614 624

9629601855






600 க்கும் அதிகமான மூலிகைசெடி வகைகள் - செ.சி.ப மூலிகை பண்ணை

வியாழன், 12 ஜனவரி, 2017

வைகுண்ட ஏகாதசி

     நமது வீரப்பாண்டியில் அமைந்துள்ள கரிவரதர் கோயிலில் (08/01/2017)  சொற்க வாசல் திறந்து கரியசேவக விண்ணகர் எம்பெருமானும் தாயார் பெருந்தேவித்யும் காச்சி அளித்தார்கள் 

 


சொற்க வாசல் 



கோயில் முண்பக்கம்

 
இராஜகோபுரம் உறி அடி மண்டபம் 


திருக்கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் மகிழ்ச்சியுடன் நன்கொடை  வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
சிட்டி யூனியன் வங்கி, வீரப்பாண்டி, கண்டாச்சிபுரம் தாலுகா ,
S/B. Acoount 056001000322424,
IFSC Cod: CIUB0000056,
. . . . . . . . . . . . . . . . .  . . .

பெருந்தேவி தாயார் சமோத கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்,
வீரப்பாண்டி
கண்டாச்சிபுரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்,