Translate

சனி, 23 ஜனவரி, 2016

ஆக்கிரமிப்பு அகற்றம்

நமது ஊர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
ஆக்கிரமிப்பு அகற்றம்

நீர்த்தார் கூத்து 22/01/2016

     நீர்தார் கூத்து

நமது தமிழர் பாரம்பரியமாக  இறந்தவர்களுக்கு 30ஆம் நாள் கூத்து நடை பெறுவது வழக்கமாக இருந்தது தற்போது  இது போல் கூத்து நடை பெறுவது அரிதாகிவருகின்ற சமயத்தில் நமது வீரப்பாண்டியில் சில நீர்த்தார் கூத்து நேற்று 22/01/2016  அபிமன்னன் வதை கூத்து நடைபெற்றது

வியாழன், 21 ஜனவரி, 2016

ஆற்றுத் திருவிழா 19/01/2016

     19/01/2016 அன்று காலை 7 மணி அளவில் நமது வீரப்பாண்டி சிவன் ஆலயத்தில் இருந்து திருக்கோவிலூர் தென்பென்ன ஆற்றுக்குப் புறப்பட்டது

10 00 மணி அளவில் ஆற்றுக்கு வந்தது
முதலில் இரெட்டை விநாயகரும் அடுத்து வீரப்பாண்டி சிவனும் அடுத்து கிழையூர் சிவனும் ஒரு பந்தலிலும்

அடுத்த பந்தலில் அரகண்டநல்லூர் சிவனும் காச்சி அளித்தார்கள்

மதியம் 1.10 மணியவில் உற்சவ சிலையான திரி சூல வடிவான அம்மன் ஆற்றில் இரங்கியது

5.00 மணியளவில் ஆற்றில் இருந்து சாமிகள் புறப்பட்டது வீரப்பாண்டியை சுற்றி விட்டு சிவன் கோவிலை வந்தடைய இரவு  11.00 மணியாகிவிட்டது

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஞாயிறு பொங்கல் (சூரியன் பொங்கல்)

     இன்று காலை சூரிய உதயத்தின் போது பொங்கல் வைத்து ஞாயிற்றுக்குப் படைப்பார்கள் இதனால் ஞாயிறுப் பொங்கல் எண்ணும் கூறுவார்கள்
இன்று மதியம் கரி சமைத்து உண்பார்கள்.
     கேளிக்கை கொண்டாட்டமும் மகிழ்ச்சியாய் கடற்கரை ஆற்றங்கரை திரையரங்கம் போன்ற இடங்கள் கூடம் நிரம்பி வழியும்.
     இன்று பல வீதியில் உறியடி நடைபெற்றது ஒரு இடத்தில் கோலப் போட்யும் கபடியும் மற்றும் சில விலையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.


     சென்ற ஆண்டு இந்த நாளில் சருக்கு மரம் ஏறும் போட்டியம் பரவலாக நடந்தது இம்முறை இது போன்ற போட்டியைக் கானவில்லை.
    மற்ற வியாபாரத்தை மிச்சும் அரசு வியாபாரம் டாஸ்மார்க் மதுபானம், இதற்கு மட்டும் எப்பொதும் சரக்கு இல்லை என்றே கூறாமல் அமுத சுரப்பியாய் வந்து கொண்டே இறுகு. நாயவிலைக்கடயில் (ரேசன் கடை) அரிசி, கோதுமை, மைதா, பாமாயில், சர்க்கரை, சீமை எண்ணை (மண்ணெண்ணெய்). கூட்டுறவு வங்கியில் உரம் பல முறை விவசாய கடன். மற்றும் பல அரசு இடம் காளியாக்க இருக்கும் ஆணால் டாஸ்மார்க் மட்டும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும்



     இன்று காலைக் குழந்தைகள் மாமா வீட்டிற்கு சென்று பால் பொங்குசா என்று கேட்டு ஆற்றுத் திருவிழாவிற்கு காசு வாங்குவார்கள் இதில் ஒருவித மகிழ்ச்சி குழந்தைகளுக்கு.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

சமுதாய கூடம்

   15/011/2016 மதியம் மாரி சமுதாய கூடம் பரமத்து பணி முடிந்து (புதுப்பித்தல்) திறக்கப்பட்டது

தை பொங்கல்

தமிழர் திரு விழா பெரும் பாணை பொங்கள்


பொங்கல் கோலம்

விதி முழுவதும் பொங்கள் சமைப்பது

பொங்கள் படையல்

மார்கழி பசனை

     சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாணைப் பொங்கல் இன்று மிகப் பெரிய பானையில் சுமார் 16 படி பச்சை அரிசி போட்டு பொங்கல் பொங்க வைத்து உறவினர்களுக்குக் கொடுப்பது வழக்கம் இன்று சிறிய பானையில் வைப்பதும் சிலர் சில்வர் பாத்திரத்தில் பொங்கல் வைப்பதும் மாரிவருகின்றது

வியாழன், 14 ஜனவரி, 2016

போகி பொங்கல்

போகி பொங்கல்

போகி பொங்கல் இது தமிழர் திருநாளாக இருந்தும் சில கயவர்களாலும் பல மடையர்களாலும் தமிழை இத்திரு விழா அழித்தும்  தமிழுக்கு ஊரு விலைவித்தது காரணம்.
ஓலை சுவடிகள்

     பல தமிழ் சுவடிகளும், பல தமிழர் ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தி தீக்கு இறையாக்கி இருப்பது வரலாற்றில் கசப்பான உண்மை.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

விவேகானந்தர்

   

 இந்தியா முழுவதும் பயணம் செய்த அனுபவத்தோடு சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றார் விவேகானந்தர். தனது உரைகள் மூலம் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் புகழ் பெற்றார். வெளிநாட்டில் அவருக்கு கிடைத்த சீடர்களில் மார்க்கரெட் எலிசபெத் மிகவும் முக்கியமானவர்.

     அவர் லண்டனில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்தார் . விவேகானந்தரின் கருத்துகளால் கவரப்பட்ட அவரை இந்தியப் பெண்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக விவேகானந்தர் தயார் செய்தார். அதற்காகவே 1898-ல் கல்கத்தா வந்து சேர்ந்தார் அவர். பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்குப் பெண் அடிமைக் கருத்துகள் தலை விரித்து ஆடிய காலம் அது.
       விவேகானந்தரின் பெண்கள் பள்ளி

மார்க்கரெட் எலிசபெத்துக்குச் சகோதரி நிவேதிதா என்று பெயர் வைத்தார் விவேகானந்தர். இந்தியாவில் உள்ள துறவிகளின் நடைமுறையில் முன் எப்போதும் இல்லாதபடி முதல்முறையாக அந்த வெளிநாட்டுப் பெண்ணைத் துறவியாக்கினார். அவருக்கு பரமாச்சார்யா எனும் துறவுப் பட்டத்தையும் வழங்கினார். இந்தியாவின் துறவு வாழ்க்கையில் இத்தகைய நிலைக்கு உயர்ந்த முதல் வெளிநாட்டுப் பெண் இவரே. இதையெல்லாம் நிவேதிதாவின் கல்விப் பணியைப் பலப்படுத்தவே விவேகானந்தர் செய்துள்ளார்.

     ராமகிருஷ்ணரின் மனைவியான அன்னை சாரதா தேவிக்கும் அவருக்கும் அறிமுகமானவர்களையும் கொண்ட கூட்டமும் நடத்தப்பட்டது. “முதலில் உங்களின் பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்புங்கள்” என்று கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தின் பின்னணியிலிருந்து எல்லோரையும் உற்சாகமாக இதை ஆதரிக்க வைக்கப் பெரிதும் முயன்றார் விவேகானந்தர். ஆனாலும் பெரிய தயக்கம்தான் இருந்தது. விவேகானந்தர்தான் கட்டாயப்படுத்திப் பெண் குழந்தைகளை வரவழைக்கச் செய்தார்.

     1898 நவம்பர் 13- ல் காளி பூஜை அன்று கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 1848-ல் மகாராஷ்டிரத்தில் ஜோதிபா புலேயும் அவரது மனைவி சாவித்திரிபாய் பூலேயும் ஆரம்பித்த பெண்கள் பள்ளியைப் போல அது ஆரம்பிக்கப்பட்டது.

     இன்னும் இயங்கும் பள்ளி

     இந்தியாவின் நவீன கல்வி வரலாற்றில் முதல் பெண் ஆசிரியையான சாவித்திரிபாய் புலே இறந்த 1897-க்கு அடுத்த வருடத்தில் அவரது பணியை மேலும் எடுத்து வளர்ப்பதைப் போல விவேகானந்தரின் பள்ளி தொடங்கப்பட்டது.

அன்னை சாரதா தேவி பள்ளியைத் தொடங்கி வைத்தார். அந்தப் பள்ளி இன்னமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. (http://sisterniveditagirlsschool.org)
   
     விவேகானந்தரும் சகோதரி
நிவேதிதாவும் மறைந்த பிறகு பள்ளி செயல்படுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் தாண்டித் தற்போது 1 முதல் 12 வரையான வகுப்புகளோடு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிவேதிதாவைப் போன்ற அர்ப்பணிப்புமிக்க பெண்கள்தான் இன்னமும் பள்ளியின் தலைமையில் உள்ளனர்.

     ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட இந்தியர்களின் துன்பமான நிலையைக் கல்வியால்தான் மாற்ற முடியும் என்று விவேகானந்தர் நம்பினார். அதிலும் இந்தியப் பெண்கள் கல்வி கற்றவர்களாக மாறினால்தான் நாட்டின் நிலை மாறும் என்றார் அவர். அதுதான் அவரைப் பெண்களுக்கான பள்ளியையும் அதற்கான பொறுப்பாளராக நிவேதிதாவையும் தேர்ந்தெடுக்க வைத்தது.
கல்வியும் வழங்குவதும்

     விவேகானந்தருக்குக் கல்வி பற்றிய தீர்க்கமான கருத்துகள் இருந்தன. மனிதருக்குள்ளே ஏற்கெனவே இருக்கிற முழுமைத் தன்மையை வெளியே கொண்டுவருவதுதான் கல்வி என்றார் அவர்.

     மனிதர்களைச் சொந்தக்காலில் நிற்கவைத்துத் தன்னம்பிக்கையும் சுயமரியாதையையும் தருவதாகக் கல்வி இல்லை என்பது அவருக்கு வருத்தம். வெறும் தகவல்களைச் சேகரித்துத் தருவதல்ல. சிறந்த மனிதரை உருவாக்குவதாகவும் நல்ல பண்புகளைக் கட்டியமைப்பதாகச் சிறப்பான வாழ்க்கையை வழங்குவதாகவும் கல்வி இருக்க வேண்டும். உயர்ந்த நோக்கங்களை உள்வாங்குவதாகக் கல்வி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

     கல்வியை எப்படி வழங்க வேண்டும் என்பதிலும் அவர் தனக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார்.

     நேர்மறையானதாகக் கல்வியையே மாணவர்களுக்குத் தர வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் மனிதரைப் பலவீனப்படுத்தும். இளம் ஆண்களையும் பெண்களையும் உற்சாகமூட்ட வேண்டும். எல்லா நேரமும் அவர்களைக் குறைசொல்லிக் கொண்டேயிருக்கக் கூடாது என்றார் அவர். அவர்கள் சரியான கல்வியும் வழங்குவதும்

விவேகானந்தருக்குக் கல்வி பற்றிய தீர்க்கமான கருத்துகள் இருந்தன. மனிதருக்குள்ளே ஏற்கெனவே இருக்கிற முழுமைத் தன்மையை வெளியே கொண்டுவருவதுதான் கல்வி என்றார் அவர்.

மனிதர்களைச் சொந்தக்காலில் நிற்கவைத்துத் தன்னம்பிக்கையும் சுயமரியாதையையும் தருவதாகக் கல்வி இல்லை என்பது அவருக்கு வருத்தம். வெறும் தகவல்களைச் சேகரித்துத் தருவதல்ல. சிறந்த மனிதரை உருவாக்குவதாகவும் நல்ல பண்புகளைக் கட்டியமைப்பதாகச் சிறப்பான வாழ்க்கையை வழங்குவதாகவும் கல்வி இருக்க வேண்டும். உயர்ந்த நோக்கங்களை உள்வாங்குவதாகக் கல்வி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வியை எப்படி வழங்க வேண்டும் என்பதிலும் அவர் தனக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார்.

நேர்மறையானதாகக் கல்வியையே மாணவர்களுக்குத் தர வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் மனிதரைப் பலவீனப்படுத்தும். இளம் ஆண்களையும் பெண்களையும் உற்சாகமூட்ட வேண்டும். எல்லா நேரமும் அவர்களைக் குறைசொல்லிக் கொண்டேயிருக்கக் கூடாது என்றார் அவர். அவர்கள் சரியான நேரத்தில் முன்னேறிப்போவார்கள் என்று உறுதியான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.     கல்விச்சேவையும் மகேசன் சேவையும்

விவேகானந்தர் தனது குருவான ராமகிருஷ்ணரிடமிருந்து ஜீவன்தான் சிவன் என்று கற்றுக்கொண்டார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தெய்வத்தன்மை இருக்கிறது என்று அந்தப் போதனையால் அவர் புரிந்துகொண்டார். அதனால்தான் அவர் “சாமான்ய மனிதர்களைத் தெய்வத்தின் வெளிப்பாடாகக் கருத வேண்டும்” என்றார். “சாமானியர்களுக்குச் செய்யும் சேவைதான் கடவுளுக்குச் செய்யும் வழிபாடு” என்றார்.

விவேகானந்தர் பாணியில் புரிந்துகொண்டால் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது என்பது தெய்வத்தை வழிபடுவதைப் போன்றது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது போலக் கல்விச்சேவையும் மகேசன் சேவைதான்.

பிறருக்காகச் செய்யப்படுகிற சிறு வேலை கூட நமக்குள்ளிருக்கும் சக்தியை எழுப்பும் சக்தி படைத்தது. பிறர் நலத்தைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்திப்பதனால் படிப்படியாக நமது உள்ளத்தில் சிங்கத்தைப் போன்ற பலம் உண்டாகிறது என்று இளைஞர்களுக்கு உற்சாகமூட்டினார் அவர்.

சமத்துவத்தின் உபதேசம்

கடவுளிடம் போய்ச் சேர்கிற இன்பத்துக்காக உயிரைத் துறந்துவிடுகிற மக்கள் உண்டு. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடுங்கள். “கடவுளிடம் போய்ச் சேரவேண்டும் என்ற விருப்பத்தைக் கூட வீசி எறிந்து விட்டுப் பிறருக்கு உதவி செய்யச் செல்லுங்கள்” என்று மக்களைத் தூண்டினார் அவர்.

இளைஞர்கள் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை அபாரமானது. “உற்சாகத் தீ கொழுந்து விட்டெரிய,இறைவனிடம் குன்றாத பக்தியெனும் கவசமணிந்து, சிங்கத்தின் தைரியம் நரம்புகளில் துடிக்க, நூறாயிரம் ஆண்களும் பெண்களும் முன்வருவார்கள்” என்றார் அவர்..

அப்படி வருபவர்களின் உள்ளத்தில் ஏழைகளிடமும் ஒடுக்கப் பட்டவர்களிடமும் கருணை பொங்கும். அவர்கள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் அலைந்து, முக்திக்கான உபதேசத்தை, ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து வாழ வேண்டும் என்ற உபதேசத்தை, சமூக எழுச்சியின் உபதேசத்தை, சமத்துவத்தின் உபதேசத்தைப் பிரச்சாரம் செய்வார்கள் என்று அறிவித்தார் அவர்.

      பெண்கள் உள்பட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற விவேகானந்தரின் கனவு இன்னமும் நிறைவேற்றப்படாமல் கிடக்கிறது. அதை நிறைவேற்றுவதுதான் அவரைச் சந்தோஷப்படுத்தும்.

திங்கள், 11 ஜனவரி, 2016

திருப்பூர் குமரன்

     திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர் 4, 1904 அன்று பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நாச்சிமுத்து – கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலவில்லை. ஆதலால் கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தார்.



     1923ஆம் ஆண்டு தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். கைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கப்பெறாததால் ஈங்கூர் என்னும் ஊரில் கந்தசாமி கவுண்டர் நடத்திய பஞ்சு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.


     பிறகு காந்திய சிந்தனையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட குமரன், தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார். 1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள்

     தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது.
[2:22PM, 11/01/2016] தமிழ் இலக்கியத்தில் நீர்: இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது. இந்த கட்டுபாட்டுகளை எல்லாம் மீறி 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.


     ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது.
[2:22PM, 11/01/2016] தமிழ் இலக்கியத்தில் நீர்: ஆனாலும் உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.


     கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது. படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதாவது ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். அன்று முதல் குமாரசாமியாகவும் கவும் , திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், “கொடி காத்த குமரன்” என்று அழைக்கப்பட்டார்.

    [2:24PM, 11/01/2016] தமிழ் இலக்கியத்தில் நீர்: குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது. அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது.


     ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது. முடியவும் இல்லை. வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்!
[2:26PM, 11/01/2016] தமிழ் இலக்கியத்தில் நீர்: தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இந்திய அரசு இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு அக்டோபரில் அவரின் நினைவாக தபால் தலையை வெளியிடப்பட்டது.