Translate

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

வெள்ள நிவாரண நிதி திரட்டுதல்

     நமது வீரப்பாண்டியில் சிறுவர்கள் தங்களது பள்ளிகள் மூலமாக வெள்ள நிவாரண நிதி திரட்டியது மனதை நெகிழவைக்கின்றது.


     நமது பரம்பரியமான பழந்தமிழர் நீர் மேலாணமையை சரிவரப் புரிந்து பயன் படுத்திக் கொள்ளாமையே இதற்குக் காரணம்.

     பாரம்பரியமான நீர் மேலாண்மையில் தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி புதிய வழிகாட்டலை உருவாக்குவதே தேவையுமே, காலத்தின் கட்டளையாகி இருக்கின்றது.

சனி, 26 டிசம்பர், 2015

சிவன் கோவில்

     நமது வீரப்பாண்டி 1000 ஆண்டு பாரம்பரியமிக்க சிவன் கோவில் நடராசர் வீதி உலா


திங்கள், 21 டிசம்பர், 2015

பொம்மை

     கையால் ஊசி மூலம் துணிகளை தைத்து அழகிய குதிரை உற்பத்தி செய்தது இதனை ஊர் ஊராகச் சென்று விற்பனையும் செய்யும் பாட்டி இந்தக்குதிரை இவளவு நேர்த்தியாக தைத்து இருப்பது அதிசயம்தான்.





சொர்க வாசல் திறப்பு

     மார்கழியில் நமது வீரப்பாண்டியின் கலிவரத ராசா பெருமாள் கோவில் சொர்க வாசல் திறந்து திருமால் காச்சி அளித்தார்

மார்கழி மாதம் முழுவதும் நமது மாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஊரைச் சுற்றி வருவது வழக்கம் இந்த ஆண்டும் நடை பெறுகின்றது.

வியாழன், 26 நவம்பர், 2015

நாட்டு கார்த்தி

     இன்று இரண்டாம் நாள் கார்த்தி இதற்கு இறைவனுக்குப் படைக்கும்போது பூசனி இலையில் தாண்டைப்பார்கள் கார்திக்கு தான் மாளிகைக்கும், கோபுரத்திற்கும், குப்பைமேட்டிற்கும் அகல் விலக்கு வைத்துப் படைப்பார்கள்

பூசனி இலைபடையல்





கார்திசுற்றுதல்



 தீபந்தம்சுற்றுதல்


     இரவு ஆதி பறை மேளம் சூழ ஊரை அண்ணாமலையாரே என்ற சத்தத்தோடு மூன்று முறை வலம் வந்து அக்காதா குளக்கரை மற்று பெரியபாறை இன்றும் சில இடங்களிலும் தீட்டு வைக்கோல் போன்றவை கொளுத்தி படைப்பார்கள்.






புதன், 25 நவம்பர், 2015

கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

   

திருவண்ணாமலை 

     இன்றும் நமது வீரப்பாண்டியில் இருந்துதான் திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் திருவிழாவிற்கு கொடியும் மலை உச்சியில் எரியும் திரியும் எடுத்துச் செல்வது வழக்கம்


வீரப்பாண்டி

     நமது வீரப்பாண்டி பொறையாத்தா மலையில் தீபம் ஏற்றப்பட்டது






     மற்றும் புலிக்கள் எக்கா மலையில் (முருகர் மலை) யிலும் தீபம் ஏற்றப்பட்டது

     

வியாழன், 19 நவம்பர், 2015

கார்த்திகை தீபம்

     நமது வீரப்பாண்டியில் அகல் விலக்கு வியாபாரம் ஆதி தொழில் பாணை செய்தார்கள் இது இன்றைய நிலை? இவர்கள் வீதியில் வியாபாரம் செய்கின்றனர்கள்.


செவ்வாய், 17 நவம்பர், 2015

நமது வீரப்பாண்டி பெரிய ஏரி கோடி போதல்

     வீரப்பாண்டி பெரிய ஏரி கோடி போதல்




 நீர் பிடிப்பு பகுதிகள்




8/11/2015 & 9/11/2015 
23.4 செண்டி மீட்டர் மழை

 15 11/2015 & 16/11/2015
12.2 செண்டுமீட்டர் மழை


செவ்வாய், 10 நவம்பர், 2015

திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி மழை

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


     8/11/2015  காலை 11.00  முதல் 9/11/2015 இரவு 7.49  வரை நமது வீரப்பாண்டி சிவன் கோவில் அருகே பதிவான மழையின் அளவு  234 மில்லி மீட்டர்
8/11/2015 11:00 முதல்
 7:49     44
 9:10     38
10:45    32
12:10    29
01:33    42
04:50    25
10:00    24

8/11/2015 அதிகாலை முதல் மழை பொழிந்தது



     நமது பெரிய ஏரி தற்பொழுது கடகடப்பான் கல்லை வலைத்து நீர் மட்டம் உயர்ந்து இருக்கும் இது பாதி ஏரி நிரப்பியது.
       





தீபாவளி மழை

8/11/2015  காலை 11.00  முதல் 9/11/2015 காலை 7.49  வரை நமது வீரப்பாண்டி சிவன் கோவில் அருகே பதிவான மழையின் அலவு  44 மில்லி மீட்டர்

வெள்ளி, 23 அக்டோபர், 2015

புதன், 21 அக்டோபர், 2015

இந்து மதப் பாதை மாறுகின்றதா மாற்றப்படுகின்றதா

     இந்துக் கோயிலுக்கு வருகின்றவர்கள். அங்கு மதிக்கப்படுகின்றனர்களா? அல்லது மிதிக்கப்படு கின்றனர்களா?
   முன்பு மன்னர் ஆட்சிக் காலங்களில்  கோயிலுக்கு வருபவர்களை நன்கு மதித்தனர்கள் தற்போது பல ஆலயங்களில் செல்வந்தர் அதிகம் பனம் தருபவர்கள் மட்டும் மிகுதியாக கவணிக்கப்படுகின்றனர்கள் மற்ற மக்களுக்குச் சிகப்பு விபூதி கொடுப்பதை கூடச் சுமையாக கருதுகின்றனர்கள்.

     இதிலும் சிறுவர்கள் மிகுந்த மரியாதை குறைவாகவே நடத்தப்படுகின்றனர்கள்.

     மன்னர் ஆட்சிச் காலத்தில் தானமாகக் கொடுத்த பல ஏக்கர் நிலம் இருக்கும் கோவில்களும் இதே நிலைதான்.

     இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களிலும் நடப்பதுதான் வேதனைக்குரியது. இவற்றின் உச்சக் கட்ட வேதனையானது நமது விழுப்புரம் மாவட்ட ஆசியர் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தின் வாயில் இருக்கும் கணபதி சிலைக்கு உண்டியல் வைத்து இருப்பது தான்.

     இண்றய நிலையில் இந்து கோயில் எண்பது அரசாலும் கோயில் நிர்வாகத்தாலும் இலாப நோக்கமாகவே பார்க்கப்படுகின்றது.

   மற்ற மதங்களில் சர்ச்சிக்கு விடுமுறைபில் செல்லும் குழந்தைகளை விசாரித்ததில் அங்கு அவர்களுக்கு பிஸ்கட், சாக்லேட் போன்றவையும் பல  தின்பண்டம் தருவதாக கூறுகின்றனர்கள்

    இந்து மத கோயிலுக்கு வரும் குழந்தைகளின் நிலை எண்ண?

     இளைய சமுதாயம் மற்றும் குழந்தைகள் கடைப்பிடிக்காத பழக்கம் மற்றும் மொழி, மதம் எவ்வளவு பழமை வாய்த்ததாகவும். மேன்மைக்குரியதாகவும் இலக்கிய, இலக்கண நூல்களையும். தொல்லியல் சான்று மற்றும் தொல்யல் எச்சம் இருந்தும் நடை முறையில் இருந்து மறைந்து போய் விட்டது. அறிஞ்சர்கள் கருத்து ஏன் சாதாரண பாமரருக்கும் நன்கு தெரியும் கோயில் நிர்வாகத்திற்குத் தெரியாத காரணம் என்ன அல்லது அலசியதின் விளைவுகளா.

      கோவில்களில் வசுல் வேட்டை வாயில் முதல் கருவறை பல நிலையில் தொடர்கின்றது. இதில் கோயில்கலுக்கு கிளைகள் வேறு தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் இறைவன் இருக்கின்ற இடத்திற்கு நாம் செல்ல வேண்டாமா? இறைவனை நம் இடம் தேடி வரவைப்பது மிகக் கொடுமையான செயல் இச்செயல் நிர்வாகத்தின் இலாப நோக்கம் காட்டுகின்றதே தவிர மதத்தின் உயர்த்த தன்மையை காட்டவில்லை.

     மற்ற மதங்களின் இவ்வாறு டோக்கன் முறை இல்லை டோக்பனுக்கு பணத்தின் மதிப்பிற்கு ஏற்றது போல் இறைவனை காத்திருப்பதும் அருகில் சென்று வணங்கவும் வழி இல்லை இந்து மதத்தில் மட்டும் ஏன் இந்த நிலை?

     சர்சிக்கு செல்பவர் ஒருவரை எனது நண்பர் ஏன் மதம் மாறினாய் என்று விசாரிதுதார் அதற்கு அவர் கூறியது நமது ஆலயத்திற்கு சென்ற உடன் இதற்கு அதற்கு என்று பலவழிகளில் கட்டணம் என்ற பெயரில் பனம் பறிப்பதாகவும் அவ்வாறு இதில் இல்லை என்றார்
     

சனி, 17 அக்டோபர், 2015

வியாழன், 15 அக்டோபர், 2015

அப்துல்கலாம் 84வது பிறந்த நாள்

நமது ராக்கெட் தந்தை திரு அப்துல்கலாம் இவர்களது 84 வது பிறந்த நாள்  நமது வீரப்பாண்டியில். திருக்கோவிலூர் வேட்டாவலம் சாலையில் உள்ள ரம்யா டீகடை அருகில் கொண்டாடப்பட்டது.




செவ்வாய், 13 அக்டோபர், 2015

வெள்ளி, 9 அக்டோபர், 2015

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் 10 கிராமங்கள்

     கிராமங்கள் என்றாலே ஆங்காங்கே குப்பைகள், சாக்கடைகள், சுகாதாரமின்மை, வறுமை, கல்வியறிவின்மை நிறைந்திருக்கும் என்ற எண்ணம், நம்நாட்டு மக்கள் மத்தியில் உள்ளது. அது, தவறு என்பதை நிரூபிக்கும் வகையில், நம்நாட்டில், 10 கிராமங்கள், 10 விதத்தில் சிறப்பிடம் பிடித்துள்ளன. நம்புங்க... இந்த கிராமங்களும், நம்ம இந்தியாவில் தான் இருக்கின்றன.

1. ஆசியாவின் சுத்தமான கிராமம்: 


     மேகாலயா மாநிலத்தில் உள்ளது மாவ்லின்னாங். 'டிஸ்கவர் இண்டியா' என்ற பத்திரிகை, 'ஆசியாவின் சுத்தமான கிராமம்' என, விருது வழங்கி உள்ளது. ஷில்லாங்கில் இருந்து, 70 கி.மீ., தூரத்தில், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தில், சிகரெட், பீடி துண்டு, பிளாஸ்டிக் பைகள் உட்பட, குப்பைகள் எதையும் பார்க்க முடியாது. ஓவியத்தில் இடம் பெறும் இயற்கை காட்சிகள் போல, கிராமத்தின் வீடுகளும், தெருக்களும் பளிச்சென தோற்றம் அளிக்கின்றன. 'சுத்தம் சுகம் தரும்' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு உள்ள கிராமம் இது.

 2. என்ன வசதி இங்கு இல்லை?


     நகரங்களில் தான், வை - பை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், 'ஏசி' வகுப்பறைகள் எல்லாம் இருக்கும் என, நாம் நம்பி வருகிறோம். ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள புன்சாரி கிராமத்தில், இந்த வசதிகள் எல்லாமே உள்ளன. மினி பஸ்வசதி உட்பட, பல்வேறு வசதிகளும் இங்கு உண்டு. ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்தவர் கொடுத்த நிதியில், இந்த வசதி எல்லாம் செய்யப்படவில்லை. மத்திய அரசு மற்றும் கிராமத்தினரின் சொந்த நிதியில், இந்த வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன. நம்புங்க, இது நம் நாட்டில் உள்ள கிராமம் தான்.

3. கோடீஸ்வரர்கள் கிராமம்:

 
     மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமம், ஹிவாரே பஜார். நாட்டிலேயே பணக்கார கிராமம் என்றால் இது தான். 60க்கும் மேற்பட்ட கோடீஸ்வர்கள் உள்ளனர். 1995ல், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தினர் இங்கு, 168 பேர் இருந்தனர். தற்போது, மூன்று குடும்பத்தினர் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர். விரைவில் ஏழைகள் இல்லாத முழு கோடீஸ்வர கிராமமாகவும் மாற உள்ளது. இப்படி, ஒவ்வொரு கிராமமும் மாறினால்... 

4. 30 ஆண்டு இருளுக்கு கொடுக்கப்பட்ட ஓய்வு: 


     பீகாரில், 30 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் மூழ்கிக் கிடந்த தர்னாய் கிராமம், தற்போது சூரியசக்தி மூலம் மின்சாரம் பெற்று ஒளிர்கிறது. தங்களுக்கு தேவையான மின்சாரத்தை, தாங்களே உற்பத்தி செய்யும் கிராமம் என்ற பெயரெடுத்துள்ளது. ஆரம்பத்தில் இங்குள்ள மாணவர்கள், பகலில் மட்டுமே பாடம் படித்தனர். பெண்கள், இரவில் வீட்டை வீட்டு செல்வதையும் தவிர்த்தனர். இப்போது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நகரங்களில் ஆட்சியாளர்களால் சாதிக்க முடியாததை, 2,400 குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தினர் சாதித்துள்ளனர். முயற்சி திருவினையாக்கும் என்பது இதுதானோ.

5. பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு:

அரியானாவில், நீலம் என்ற பெண்ணை, கிராமத் தலைவராக கொண்டுள்ள கிராமம், சாப்பர். பெண்கள் பிறப்பு வீதத்தில், அரியானா மாநிலம் ரொம்ப, 'வீக்'. ஆனால், சாப்பர் கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால், வீட்டுக்கு வீடு இனிப்பு வழங்கப்படும். பெண் சிசுவை கருவிலேயே அழிப்பது, பல பகுதிகளில் தொடரும் நிலையில், பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் அளவுக்கு மக்கள் மேம்பட்டுள்ளனர் என்றால், அது வியப்பான ஒன்றே. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பது பழமொழி. அது, இந்த கிராமத்திற்குத் தான் பொருந்தும் போலும்.

6. பறவைகளை நேசிக்கும் கிராமவாசிகள்:



கர்நாடக மாநிலத்தில் சிறிய கிராமம், காக்ரிபெல்லூர். பறவைகள் எல்லாம், தொந்தரவான விஷயம். அவற்றின் இரைச்சலை தாங்க முடியாது என, பெரும்பாலானவர்கள் கூறும் நிலையில், காக்ரிபெல்லம் கிராமத்தினர், அரிய வகை பறவைகளை நேசிப்பதோடு, அவை வசிக்கவும் தேவையான வசதிகளை செய்துள்ளனர். அதனால், இந்த கிராமத்தை சுற்றிலும், எப்போதும் பறவைகளின் கிரீச்... கிரீச்... ஒலிதான். பறவைகளை நேசிக்கும் இக்கிராமத்தினர், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுவல்லவோ மனிதாபிமானம்.

7. விஷத்தை முறியடிக்கும் கிராமத்தினர்:

 உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது, பாலியா கிராமம். கிராம மக்கள் எளிதில் தண்ணீர் பெறுவதற்காக, அரசு சார்பில் போட்ட கைப்பம்புகளில் வரும் தண்ணீரில் அமிலக் கலப்பு இருப்பது தெரியவந்தது. பிரச்னையை அறிந்த கிராமத்தினர், அதை தீர்க்க அரசின் உதவியை நாடாமல், தாங்களே களத்தில் இறங்கினர். தங்களின் பழைய கிணறுகளையே தூர்வாரி பயன்படுத்தத் துவங்கினர். இப்போது, ரசாயன கலப்பில்லாத தண்ணீரை உபயோகித்து மகிழ்கின்றனர். முயற்சித்தால் முடியாதது உண்டா என்ன?

8. 100 சதவீதம் படித்தவர்கள்:


கேரள மாநிலத்தில் உள்ள பொத்தானிக்காடு கிராமத்தில் உள்ள அனைவரும் படித்தவர்களே. நாட்டிலேயே, 100 சதவீத எழுத்தறிவை எட்டிய, முதல் கிராமம் இதுதான். பொத்தானிக்காட்டில், உயர் நிலைப்பள்ளி ஒன்றும், ஆரம்பப்பள்ளி ஒன்றும், தனியார் பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, கிராம மக்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்து 563. 

9. 'குட் மார்னிங்' மூலம் மலம் கழிப்புக்கு 'குட்பை':


கர்நாடகா மாநிலத்தில், பெக்கினாகேரி என்ற கிராமத்தினர், பொது இடம் ஒன்றில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவ்வாறு செய்ய வேண்டாம் என, கிராம கவுன்சில் கேட்டுக் கொண்டும், அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கிராம கவுன்சில் உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும், கிராமத்தினர் மலம் கழிக்கும் அந்த பொது இடத்தில், அதிகாலையிலேயே போய் நின்று கொள்வர். மலம் கழிக்க வரும் ஒவ்வொருவரையும் பார்த்து, 'குட் மார்னிங்' சொல்வர். தர்ம சங்கடத்திற்கு ஆளாகும் அவர்கள், மலம் கழிக்காமல் வீட்டிற்கு சென்று விடுவர். இதனால், கிராம பொது இடத்தில் மலம் கழிப்பது படிப்படியாக நின்று, தற்போது கிராமமே மாறிவிட்டது. இப்போ, கிராம கவுன்சில் உறுப்பினர்கள், 'குட் மார்னிங்'கிற்கு குட்பை சொல்லி விட்டனர்.

10. வீட்டில் கதவுகள் இல்லாத கிராமம்:


மகாராஷ்டிரா மாநிலத்தில், ஷானி ஷிங்னாபூர் என்ற கிராமம் தான், நாட்டிலேயே பாதுகாப்பான கிராமமாக கருதப்படுகிறது. இங்குள்ள வீடுகளுக்கு கதவுகள் இல்லை. அத்துடன் போலீஸ் நிலையமும் இங்கு இல்லை. இந்த கிராமத்தில், திருட்டு என்பதே கிடையாது. ஷானி ஷிங்னாபூர் கிராமம், மற்றொரு வகையிலும் சாதனை படைத்துள்ளது. ஆம், இங்குள்ள வங்கி கிளையில், லாக்கரே கிடையாது. இந்த கிராமத்தை பற்றிய செய்தியும், ஒரு போதும் பத்திரிகைகளில் வந்ததில்லை. நல்லது தான். ஆனால், திருஷ்டிபடாமல் இருந்தால் சரி தான்.

(நன்றி : தின மலர் )