Translate

புதன், 21 அக்டோபர், 2015

இந்து மதப் பாதை மாறுகின்றதா மாற்றப்படுகின்றதா

     இந்துக் கோயிலுக்கு வருகின்றவர்கள். அங்கு மதிக்கப்படுகின்றனர்களா? அல்லது மிதிக்கப்படு கின்றனர்களா?
   முன்பு மன்னர் ஆட்சிக் காலங்களில்  கோயிலுக்கு வருபவர்களை நன்கு மதித்தனர்கள் தற்போது பல ஆலயங்களில் செல்வந்தர் அதிகம் பனம் தருபவர்கள் மட்டும் மிகுதியாக கவணிக்கப்படுகின்றனர்கள் மற்ற மக்களுக்குச் சிகப்பு விபூதி கொடுப்பதை கூடச் சுமையாக கருதுகின்றனர்கள்.

     இதிலும் சிறுவர்கள் மிகுந்த மரியாதை குறைவாகவே நடத்தப்படுகின்றனர்கள்.

     மன்னர் ஆட்சிச் காலத்தில் தானமாகக் கொடுத்த பல ஏக்கர் நிலம் இருக்கும் கோவில்களும் இதே நிலைதான்.

     இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களிலும் நடப்பதுதான் வேதனைக்குரியது. இவற்றின் உச்சக் கட்ட வேதனையானது நமது விழுப்புரம் மாவட்ட ஆசியர் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தின் வாயில் இருக்கும் கணபதி சிலைக்கு உண்டியல் வைத்து இருப்பது தான்.

     இண்றய நிலையில் இந்து கோயில் எண்பது அரசாலும் கோயில் நிர்வாகத்தாலும் இலாப நோக்கமாகவே பார்க்கப்படுகின்றது.

   மற்ற மதங்களில் சர்ச்சிக்கு விடுமுறைபில் செல்லும் குழந்தைகளை விசாரித்ததில் அங்கு அவர்களுக்கு பிஸ்கட், சாக்லேட் போன்றவையும் பல  தின்பண்டம் தருவதாக கூறுகின்றனர்கள்

    இந்து மத கோயிலுக்கு வரும் குழந்தைகளின் நிலை எண்ண?

     இளைய சமுதாயம் மற்றும் குழந்தைகள் கடைப்பிடிக்காத பழக்கம் மற்றும் மொழி, மதம் எவ்வளவு பழமை வாய்த்ததாகவும். மேன்மைக்குரியதாகவும் இலக்கிய, இலக்கண நூல்களையும். தொல்லியல் சான்று மற்றும் தொல்யல் எச்சம் இருந்தும் நடை முறையில் இருந்து மறைந்து போய் விட்டது. அறிஞ்சர்கள் கருத்து ஏன் சாதாரண பாமரருக்கும் நன்கு தெரியும் கோயில் நிர்வாகத்திற்குத் தெரியாத காரணம் என்ன அல்லது அலசியதின் விளைவுகளா.

      கோவில்களில் வசுல் வேட்டை வாயில் முதல் கருவறை பல நிலையில் தொடர்கின்றது. இதில் கோயில்கலுக்கு கிளைகள் வேறு தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் இறைவன் இருக்கின்ற இடத்திற்கு நாம் செல்ல வேண்டாமா? இறைவனை நம் இடம் தேடி வரவைப்பது மிகக் கொடுமையான செயல் இச்செயல் நிர்வாகத்தின் இலாப நோக்கம் காட்டுகின்றதே தவிர மதத்தின் உயர்த்த தன்மையை காட்டவில்லை.

     மற்ற மதங்களின் இவ்வாறு டோக்கன் முறை இல்லை டோக்பனுக்கு பணத்தின் மதிப்பிற்கு ஏற்றது போல் இறைவனை காத்திருப்பதும் அருகில் சென்று வணங்கவும் வழி இல்லை இந்து மதத்தில் மட்டும் ஏன் இந்த நிலை?

     சர்சிக்கு செல்பவர் ஒருவரை எனது நண்பர் ஏன் மதம் மாறினாய் என்று விசாரிதுதார் அதற்கு அவர் கூறியது நமது ஆலயத்திற்கு சென்ற உடன் இதற்கு அதற்கு என்று பலவழிகளில் கட்டணம் என்ற பெயரில் பனம் பறிப்பதாகவும் அவ்வாறு இதில் இல்லை என்றார்
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக